நாம் மூன்று காலங்களைப் பற்றிய அறிவைப் பெறும்போதுதான் முக்கால ஞானிகளாகிறோம். மூன்று உண்மைகளை மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பிறப்பு, நிகழ்காலத்தில் வாழ்க்கை, எதிர்காலத்தில் மரணம். இந்த உண்மைகளுக்கு அப்பால் எல்லையற்ற வெறுமை. அங்கு பொய்கள் பிசாசு வடிவங்களைப்போல அலைந்து திரிகின்றன.