“யாருதான் காசை வீணாக்காமயிருக்காங்க. நீ படமும் பொம்மையும் வாங்கறே; நான் புஸ்தகமா வாங்கறேன். பீடியாக் குடிக்குறேன். மத்தவன் எல்லாம் சினிமாவுக்குப் போறான், இல்லாட்டிப் பொம்பளைக்குக் குடுக்கறான். எனக்கு நீ பண்ற செலவு வீண் செலவாத் தோணுது! ஒனக்கு நான் பண்றது வீணாத் தோணுது.

