"டுர்ரீன்னு அதன் முகத்துக்கு முன்னாடியோ வால் பக்கமோ கத்திட்டா போதும்; பொறவு மீதியைப் பார்த்துக் கிட வேண்டியதுதான். வாடிவாசல்லே அதை அவுத்து விடறதுக்கே நடுக்கமாப் போச்சுங்க. அந்தப் பேரு நிக்கவும் தானே, அதே ஜோர்லே சமீன்தாரு வந்து கேக்கறப்போ இரண்டு முளு நோட்டுக்கு தள்ளிட்டாரு தேவரு. பேரு போதும், ரூபாயைக் கண்ணாலே பார்ப்போம்னு."