"அவுங்க அப்பன் சொல்லிச் செத்தாரு : வயசுக் காலத்திலே இல்லாமே வயசான காலத்திலே இல்லெ இந்தக் காரிக்களுதை கண்ணிலே பட்டிருச்சு. இல்லாட்டி அந்த ஒரு பிடியிலே சகதியிலே அமுக்கிறாப்லே அமுக்கி இருப்பேன். இப்போ, மொக்கையத் தேவர் காரிகிட்ட அம்புலித் தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப் போச்சு."