புன்குருக்கன், சுரி நெற்றிக்காரி, நுண்பொறி வெள்ளை எனப் பலவகைக் காளைகளும் அவற்றைத் தழுவிச் சாய்க்கும் வீரத்தலைவர்களும் 'முல்லைக் கலி'யில் காட்சியாகின்றனர். 'எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்' என ஏறு தழுவும் களக்காட்சி அங்கே வருணிக்கப்படும்.