எந்த விளையாட்டிலுமே சம்பந்தப்பட்ட இருவருக்கும் 'இது விளையாட்டுத்தான்' என்று தெரிந்திருக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. மனிதனுக்கு விளையாட்டு; மிருகத்துக்கு அது தெரியாது. விளையாட்டு என்று அறியாத மிருகத்தின் பின்னணியில் இருக்கும் மனிதன், இதனை எத்தனையோ விதமாகக் கையாள வாய்ப்பிருக்கிறது. அதன் சாத்தியங்கள் சிலவற்றை 'வாடிவாச'லில் காணலாம். மனித சக்திக்கும் மிருக சக்திக்கும் இடையிலான போராட்டம் எனினும் மனிதனுக்குள் இருக்கும் சுபாவமான மிருகவெறியை வெளிப்படுத்தும் விளையாட்டாக இருக்கிறது.
Srihari Iyer liked this