1920ஆம் ஆண்டில் பால்கன் பகுதியிலிருந்து ஓட்டமான் சாம்ராஜ்யத்தை விரட்டியடித்த பின் அல்பேனியர்கள் நிலப்பகுதியை செர்பியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வந்த போது - அமெரிக்க ஜனாதிபதி Woodrow Wilson அல்பேனிய நிலப்பகுதியை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர், அல்பேனியர்கள் ஐரோப்பாவின் மூத்த இனக் குழு அவர்களுக்கென தனி நாடு வேண்டுமென வாதாடி அல்பேனியா எனும் நாடு உருவாகக் காரணமாக இருந்தார் என்பதால் அல்பேனியர்களுக்கு அமெரிக்கா மீது எப்போதும் செம காதல் இருந்து கொண்டே இருந்தது. தங்களுக்கென ஒரு நாடு உருவாக்கி தந்தது அமெரிக்கா என்கிற பாசம் உண்டு
...more