சோமாலியாவின் கடற்பகுதிக்குள் பன்னாட்டு மீன் பிடி கப்பல்கள் உட்புகுந்து சோமாலியாவின் மீன்களை வாரிச் சென்றன. அரசு இல்லாத நிலையில் மீனவர்களும் ஆயுதங்களை எடுத்தார்கள். தங்கள் எல்லைக்குள் வரும் கப்பல் ஒன்றை சிறை பிடித்தனர். கப்பலை மீட்க பன்னாட்டு நிறுவனம் பணம் தந்தது. இதுவே மெல்ல மெல்ல சோமாலியர்கள் கடற்கொள்ளையர்களாக உருவாகக் காரணமானது.