ஒருவிதத்தில் முதலாம் உலகப் போரின் முடிவில் போடப்பட்ட Treaty of Versaillesசே அடுத்த உலகப் போருக்கு காரணமாக இருந்தது. பொய்களை மிக நேர்த்தியாக சொல்வதும், அந்தப் பொய்களை ஊடகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்தான் ஹிட்லரின் உத்தி. கிட்டத்தட்ட நம்மூர் பணமதிப்பிழப்பு விவகாரத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டதோ அதைப் போலத்தான் இதுவும். பணமதிப்பிழப்பு, இந்தியாவை வல்லரசாக்குமென அறிவாளிகள் பலர் எப்படி இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல் ஹிட்லரின் எல்லாவித கோமாளித்தனத்தையும் ஜெர்மானிய மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்ற பொய்கள் அவை.