அமெரிக்காவிடம் பொருளாதார நேசக் கரம், பிரெஞ்சுக்காரர்களின் ஒன்றிணைந்த ஐரோப்பிய கனவுக்கு ஆதரவு, பொருளாதார நெருக்கடியில் இருந்த சோவியத் ரஷ்யாவுக்கு பொருளாதார உதவி, இங்கிலாந்திடம் மென்மையான போக்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் நேட்டோ படைகளை நிறுவுவதில்லை என்கிற வாக்குறுதி என, அனைத்து நேசப்படை நாடுகளையும் திருப்திப்படுத்தி, பெர்லின் சுவர் வீழ்ந்த அடுத்த வருடம் 3-அக்டோபர்-1990 அன்று கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாகின. 1945ல் பிரிக்கப்பட்ட ஜெர்மானிய நிலப்பகுதி 1990ல் ஒன்றாகியது. முதலாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை வெற்றி பெற்ற நாடுகள் கையாண்ட விதமும், இரண்டாம் உலகப் போருக்கு பின் அவர்கள்
...more