யுகோஸ்லாவியம் எனும் தேசியக் கொள்கை செர்பியர்களுக்கே சாதகமாக இருக்கிறதென மற்றவர்கள் நம்பினார்கள். ஆனாலும் மார்ஷல் டிட்டோ அனைவரையும் சமமாக நடத்தப்படுவதாக கூறி வந்தார். இந்த நிலையில், உள் நாட்டில் நடந்த சிறு சிறு கிளர்ச்சிகளை அடக்கினாலும் அது யுகோஸ்லாவிய எதிர்காலத்தை குறித்த சந்தேகத்தை விதைத்தது. யுகோஸ்லாவிய தேச முழக்கமான 'Brotherhood and Unity' (சகோதரத்துவமும் ஒற்றுமையும்) என்பது சாத்தியமில்லை என மெல்ல உணர துவங்கிய மார்ஷல் டிட்டோ, 1968ஆம் ஆண்டு யுகோஸ்லாவிய அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்தார். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு அமலானது. சந்தைப் பொருளாதாரமும் கூட
...more