மரம் அழித்தல், புல்வெளிகள் அழித்தல், கடல் வளம் பறிபோதல் என சோமாலியாவின் இயற்கை வளங்கள் எந்த முறையுமின்றி சூறையாடப்பட்டன. சோமாலியர்கள் இருப்பை ஏகே 47களும் சிறு இனக்குழுக்களுமே முடிவு செய்தன. மழைப்பொழிவு இன்னும் இன்னும் குறைந்தது வறட்சியை எதிர் கொள்ள முடியாமல் திணறினர். இதன் விளைவு பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. பட்டினி சாவுகளுக்கும் உள் நாட்டு போருக்கும் இடையில் சிக்கி, தீர்க்க முடியாத சுழற்சியில் சிக்கிக் கொண்டனர்.