பெரும்பான்மை செர்பியர்களுக்கு எதிராக அல்பேனிய மக்களை ஒன்றுபடுத்தியது அல்பேனிய தேசிய உணர்வு. அவர்களை செர்பியர்களுக்கு எதிராகப் போராட வைத்தது அல்பேனிய தேசியவாதம். எந்த வகையிலும் செர்பிய அதிகாரம் வளரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் அல்பேனியர்கள். செர்பியர்களுக்கோ அது பறிபோன நிலம். ஆனால் கொசோவாவில் வாழும் அல்பேனிர்களுக்கோ அது தாங்கள் அரசியல் அதிகாரத்தோடு வாழக் கூடிய பாதுகாப்பான ஒரு இடம். அல்பேனிய தேசத்துக்கோ கொசோவா அகண்ட அல்பேனியக் கனவை நினைவாக்கும் நிலம்.