“என்ன எழவடி செஞ்சுருக்க. கல்யாணம் பண்ணிட்டேன்னு வந்து நிக்கிற?” தேவியின் அம்மாவுக்கு நெஞ்சையடைத்துக் கொண்டு வந்தது. “ஊருக்குள்ள நாளப்பின்ன எப்பிடி நாங்க தல நிமிர்ந்து போறது?” “ஆமா இப்ப மட்டும் பெரிய ஜமீன் பரம்பர. ஏம்மா ஆகாததா பேசற? நாமளே அன்னக்காவடிதான… என்ன பெரிய கவுரவம்,,”