ரூஹ் [Rooh]
Rate it:
1%
Flag icon
இந்த  கதைக்காக நிகழ்ந்த உரையாடல்கள், வாசித்த புத்தகங்கள்   சங்கடங்களோடு யாருடனாவது பழக நேர்ந்தால் அவை வெறுப்பாவதற்கு முன்னால் விலகிப் போய்விடும் பக்குவத்தை உருவாக்கியருக்கின்றன.
2%
Flag icon
தனக்குப் ப்ரியப்பட்ட ஒவ்வொருவருக்கும் மனதின் அடியாழத்திலிருந்து  தருவதற்கு எவ்வளவோ அவளிடம் இருந்தன.
2%
Flag icon
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
3%
Flag icon
நபிகளார் சொல்வதுபோல் இறைவன் மனிதனை தன்னைப் போலவே உருவாக்கினான் என்பதுதான் இறை நம்பிக்கை நமக்குக் கற்றுத்தரும் செய்தி.
3%
Flag icon
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம்  பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? 
4%
Flag icon
திடீரென ஒரு பக்கீரைப் பார்த்து அதிர்ந்தாள். அவளுடலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் கால்களில் ஒரு நடுக்கம் உண்டானது. தான் பார்த்தது அவனாக இருக்கக் கூடாதென மனதை சமாதானம் செய்து கொள்ள நினைத்தாலும் அவளால் உண்மையை மறுக்க முடியவில்லை. அவனேதான்.
4%
Flag icon
ஜோதி – லிங்கம் எந்தப் பெயரில் அவனை இப்போது அழைப்பது?
4%
Flag icon
ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?
Gowrishankar Subramanian
உண்மை. நீண்ட பிரிவு முடிந்து ஒருவரை சந்திக்கும் போது அவர் தோற்றம் முதுமை அடைந்து விட்டதாக உணர்கிறோம்
10%
Flag icon
”அவனுடைய ( மனிதன் ) பிடரி நரம்பை விடவும் நாம் ( இறைவன் ) அவனுக்கு நெருக்கமாய் இருக்கிறோம்.”
10%
Flag icon
ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது.  கடலோரத்தில் வாழும் மனிதன் எவ்வாறு கடலின் தன்மையைக் கொண்டிருக்கிறானோ கடலும் அவ்வாறு தன் கரையோரத்தில் வாழும் மனிதர்களின் இயல்பை கிரகித்துக் கொள்கிறது.