தன் கடந்த காலத்தைய தவறுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்விற்கான பாதையில் பயணிக்கத் துவங்கிய மனிதன் தனது ஒவ்வொரு தப்படிகளையும் உறுதியாக எடுத்து வைத்தான். தோல்வியுற்று மீண்டுவரும் மனிதனுக்கு சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும் அவன் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பவதெல்லாம் ஒன்றைத்தான், நான் இன்னொருமுறை உங்கள்முன் தோற்கப்போவதில்லை. அன்வர் இந்த உலகிற்கு அந்தச் செய்தியை சத்தமாய் சொல்லத் துவங்கியிருந்தான்.