அவனைச் சூழ்ந்திருந்த மனிதர்கள் கசந்தார்கள். அவர்களின் சிரிப்பும் சந்தோசமும் எரிச்சலூட்டின. மனிதன் துயரப்படுவதற்கென்றே படைக்கப்பட்டவனென்கிற அவனின் நம்பிக்கைகளை மற்றவர்களின் சந்தோசங்கள் பொய்யாக்கின. வாழ்வின் அறத்திற்கு எதிராக இயங்கும் அவர்களை உள்ளூர வெறுத்தான்.