{அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.}