தான் இந்த சந்தனக்கூடு திருவிழா 250 வருடங்களுக்கும் மேலாக எல்லா சமூகத்தினருக்குமான திருவிழாவாக இருந்து வருகிறது. முத்தரையர் சமூகத்தினர் எடுத்து வரும் கடல் நீரால் தர்ஹா கழுவப்படுகிறது. சந்தனக்கூடு செய்வதற்கான மரப்பேழைகளை ஆசாரி சமூகத்தினர் உருவாக்குகிறார்கள். தீப்பந்தங்கள் தயாரிப்பதற்கான துணிகளை சலவைத் தொழிலாளிகள் செய்து தருகிறார்கள். தீப்பந்தங்களுக்கான எண்ணையை ஆதிதிராவிட சமூகத்தினர் தருகிறார்கள். இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு துரும்பிலும் ஒற்றுமையே மிளிரும்.