‘கண்மணி எல்லோரையும் மீட்டெடுத்துக் கொடுக்கும் உன்னை என்னால் மீட்டெடுக்க முடியுமா? உன்னிலிருந்து நீங்கிய நாளிலிருந்து இன்னும் நான் அமைதியைக் கண்டடையவில்லை. எரிமலைக் குழம்பின் உலர்ந்த சாம்பலாய் உன் நினைவுகளிலிருந்து முழுமையாய் மீளமுடியாதவளாகத்தான் இப்போதும் இருக்கிறேன். எப்போதெல்லாம் ஒரு மழை பெய்கிறதோ, எப்போதெல்லாம் ஒரு விதை முளைக்கிறதோ அப்போதெல்லாம் நீயும் என்னில் புதிதாய் முளைத்துக் கொண்டேதான் இருந்தாய். பறவைகளும் போகத் துணியாத வறண்ட நிலங்களில் கூட உனக்காக அலைந்து திரிய தயாராய் இருந்தேன், ஆழ் கடலில் நீ இருக்கக் கூடுமென்றால் மொத்தக் கடலையும் நீந்திக் கடந்து உன்னை வந்து சேர்ந்துவிடும்
...more