தான் ஒரேயொரு தவறான முடிவை எடுத்தாலும் அது அந்தக் கப்பலில் உள்ள அனைவரின் உயிரையும் பறித்துவிடும் என்பதை அஹ்மத் அனுபவத்தில் உணர்ந்திருந்தான். எதிர்த்துச் சண்டையிட்டு தன்னோடு வந்தவர்களை பலி கொடுக்க விருப்பமில்லை. பொக்கிஷங்களை சம்பாதித்து விடலாம். ஆனால் ஞானிகளையும் அவர்களின் ஞானப்பொக்கிஷத்தையும் காக்க வேண்டியது தலையாய கடமை.