நிக்காஹ் என்பது ஒரு பெண்ணின் புறவயமான அடையாளத்தை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் அகத்தில் அவள் எப்போதும் தனித்துவமானவளாகவே தகிக்கிறாள். பெண்களின் ஆழ் மன நாட்டங்களை, ஆளுமையைப் புரிந்து கொள்ள பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை. தன்னோடு திருமண உறவிற்குள் வரும் ஒரு பெண் முழுமையாக தனக்குரியவளாய் ஆகிறாள் என்கிற ஆண்களின் அகந்தை அந்தப் பெண்களின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும்போது தோற்றுப் பின் வாங்குகிறது. அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது. அன்பின் ஒளியை சகல ஜீவராசிகளுக்கு
...more