தோல் பொம்மை செய்வதில் விட்டல்ராவிடம் இருந்த அந்த செய்நேர்த்தி ஜோதிலிங்கத்திடமும் இருந்தது. ஆனால் அவன் அந்தத் தொழிலை செய்ய விரும்பவில்லை. சொல்லப் போனால் எந்தத் தொழிலையும் செய்ய விரும்பவில்லை. அவன் காத்திருப்பது ஒரு அற்புதம் நிகழ்வதற்காக. எல்லாக் கதைகளும் மனிதர்கள் அற்புதங்களை செய்ய வல்லவர்கள் என்பதைத்தானே அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன. அர்ச்சுனனும், பீமனும், கிருஷ்ணனும் பாரதக் கதையில் சாத்தியமென்றால் தன் வாழ்வில் அற்புதம் நிகழக்கூடுமென எதிர்ப்பார்ப்பதும் சாத்தியம் தானே. அனுமன் வங்காள விரிகுடாவைத் தாண்டி இலங்கையிலிருந்து சீதா பிராட்டியை மீட்டு வரமுடியுமென்றால் இவனாலும் ஒரு அற்புதத்தை
...more