ரூஹ் [Rooh]
Rate it:
Read between February 19 - February 28, 2022
0%
Flag icon
தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே…
Sheik Hussain A
1
1%
Flag icon
எல்லோரையும் நேசிக்கும்படியான  பெரியதொரு  இதயத்தை வேண்டிப் பெற்றுவிட வேண்டுமென்பதுதான் எனது ஒரே பிரார்த்தனை. 
Sheik Hussain A
1
2%
Flag icon
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
Sheik Hussain A
1
3%
Flag icon
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம்  பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?  அதை திறந்த நிலை உறக்கமென்று கொண்டால் அவர்கள் கனவுகளை சேமிக்கிறார்களா? பிணி குணமான மனிதர்களுக்கு பிணியுற்ற நாட்கள் குறித்த நினைவுகள் மிஞ்சியிருக்குமா? எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.
Sheik Hussain A
1
10%
Flag icon
கடல் உறங்குவதுமில்லை, விழிப்பதுமில்லை. பூமியின் இயக்கத்தைப் போல் ஓயாது அலைகளாகவும் குமிழ்களாகவும் தன்னை அண்டிய உயிர்களுக்குள்ளாக இயங்கியபடியே இருக்கிறது. அதற்கொரு தோற்றமுண்டு, தன்மை உண்டு. முக்கியமாய்  உயிருண்டு. ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது. 
Sheik Hussain A
1
11%
Flag icon
தான் ஒரேயொரு தவறான முடிவை எடுத்தாலும் அது அந்தக் கப்பலில் உள்ள அனைவரின் உயிரையும் பறித்துவிடும் என்பதை அஹ்மத் அனுபவத்தில் உணர்ந்திருந்தான். எதிர்த்துச் சண்டையிட்டு  தன்னோடு வந்தவர்களை பலி கொடுக்க விருப்பமில்லை. பொக்கிஷங்களை சம்பாதித்து விடலாம். ஆனால் ஞானிகளையும் அவர்களின் ஞானப்பொக்கிஷத்தையும் காக்க வேண்டியது தலையாய கடமை.
Sheik Hussain A
1
15%
Flag icon
இருபத்தியோறு வயதில் முதல் முறை சென்றபோது இந்த உலகை தன் விருப்பங்களால் தேடல்களால் வெல்ல நினைக்கும் ஒரு இளைஞனின் வேகமிருந்தது. பயணத்திற்குப் பின் எதையும் வென்று எதையும் செய்யப் போவதில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது.
Sheik Hussain A
1
15%
Flag icon
ஹஜ்ஜுக்குச் செல்லும் புனிதப் பயணம் ஒரு இஸ்லாமியனின் வாழ்வில் மறுபிறப்பைப் போல. தனது முந்தைய தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொண்டு தன் வாழ்வின் புதிய வெளிச்சங்களைக் கண்டுகொள்கிறார்கள்.
Sheik Hussain A
1
18%
Flag icon
நிக்காஹ் என்பது ஒரு பெண்ணின் புறவயமான  அடையாளத்தை  வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் அகத்தில் அவள் எப்போதும் தனித்துவமானவளாகவே தகிக்கிறாள்.  பெண்களின் ஆழ் மன நாட்டங்களை, ஆளுமையைப் புரிந்து கொள்ள பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை. தன்னோடு திருமண உறவிற்குள் வரும் ஒரு பெண் முழுமையாக தனக்குரியவளாய் ஆகிறாள் என்கிற ஆண்களின் அகந்தை அந்தப் பெண்களின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும்போது தோற்றுப் பின் வாங்குகிறது. அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது. அன்பின் ஒளியை சகல ஜீவராசிகளுக்கு ...more
Sheik Hussain A
1
24%
Flag icon
தோல் பொம்மை செய்வதில் விட்டல்ராவிடம் இருந்த அந்த செய்நேர்த்தி ஜோதிலிங்கத்திடமும் இருந்தது. ஆனால் அவன் அந்தத் தொழிலை செய்ய  விரும்பவில்லை. சொல்லப் போனால்  எந்தத் தொழிலையும் செய்ய விரும்பவில்லை. அவன் காத்திருப்பது ஒரு அற்புதம் நிகழ்வதற்காக.  எல்லாக் கதைகளும் மனிதர்கள் அற்புதங்களை செய்ய வல்லவர்கள் என்பதைத்தானே அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன. அர்ச்சுனனும், பீமனும்,  கிருஷ்ணனும் பாரதக் கதையில் சாத்தியமென்றால் தன் வாழ்வில் அற்புதம் நிகழக்கூடுமென  எதிர்ப்பார்ப்பதும் சாத்தியம் தானே. அனுமன்  வங்காள விரிகுடாவைத் தாண்டி இலங்கையிலிருந்து சீதா பிராட்டியை மீட்டு வரமுடியுமென்றால் இவனாலும் ஒரு அற்புதத்தை ...more
Sheik Hussain A
1
29%
Flag icon
அன்வர் அந்த வீட்டின் கடைக்குட்டி, செல்லமாக வளர்ந்தவன். இப்பொழுது நல்ல தொழில்காரனென்பதால் எல்லோருக்கும் அவனில் விருப்பம். எல்லா ஏற்பாடுகளும் பெரிதாக இருக்கவேண்டுமென்பது அன்வர் பக்கத்து ஆட்களின் எண்ணம். ராபியா இந்த ஆடம்பரங்களை முழுதாக வெறுத்தாள். ‘எதுக்கு இவ்ளோ செலவு செய்றாங்க. ரெண்டு பேர் சேந்து வாழப் போறாங்கனு சொந்தக்காரங்களுக்கு சொல்லணும். அத செலவில்லாம செய்ய வேண்டிதான.” என உம்மாவிடம் புலம்பினாள். “செலவில்லாம செய்யனும்னா இன்னாருக்கு இன்னாரோட நிக்கா முடிஞ்சதுன்னு சொந்தக்காரங்களுக்கு எல்லாம் லெட்டர் தான் போடனும். எதையாச்சும் பெரிய மனுஷியாட்டம் பேசாம சும்மா இரு…” என உம்மா அவளை அமைதிப் ...more
Sheik Hussain A
1
32%
Flag icon
அவனுக்கென அவனைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்ட மிகச்  சில நண்பர்களே இருந்தனர். சொற்களாலும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தாத அந்த மிகச் சிலரோடுதான் அவனது விளையாட்டுப் பருவத்தின் சந்தோசங்கள் திட்டுத்திட்டாய் மிஞ்சியிருந்தன.
Sheik Hussain A
1
34%
Flag icon
யாரிடமாவது மனதிலிருக்கும் குறைகளைக் கொட்டிவிடும் போது தீர்வுகள் கிடைக்காது போனாலும் அந்த நேரத்திற்கான ஆறுதலும் மன நிம்மதியும் கிடைத்துவிடுவதால் தான் மனிதர்கள் தங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ள சக மனிதர்களை எதிர்பார்க்கிறார்கள்.
Sheik Hussain A
1
34%
Flag icon
பசியும் வறுமையும் தேவைகளும் தான் மனிதர்களை சக மனிதர்களோடு மிக எளிதில் பிணைத்துவிடுகிறது.
Sheik Hussain A
1
35%
Flag icon
இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான்.   சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள்.  சக மனிதனின்  அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள்  தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது.
Sheik Hussain A
1
40%
Flag icon
அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போதில்லாத நிறைவு, துறக்க நினைக்கையில் வருவதுதான் ஆச்சர்யம். எதுவுமில்லாத மனிதனுக்கு இத்தனை ஆறுதலான வாழ்வு கிடைக்குமென்றால் உலகின் வெற்றிகளைத் தேடி ஓடுகிற மனிதர்கள் எதைக் கண்டடைகிறார்கள்? துயரையும் பழிகளையும் பாவங்களையும்  பொறாமைகளையும் சாபங்களையும்  தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான். அக்கணம், அச்சிறிய கணம் எளிய களிப்புகளில் திளைக்கும் மனிதர்கள் அப்படியான கணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்க விழைகிறார்கள்.
Sheik Hussain A
1
41%
Flag icon
கதைகள் மக்களின் வாழ்க்கையிலிருந்துதான் புத்தெழுச்சி பெறுகின்றன. அவர்கள் தான் வாழ்வதற்கான புதிய அறங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.
Sheik Hussain A
1
44%
Flag icon
’எத்திசை நோக்கி பயணம்?’ என கதை சொல்லி அவனிடம் கேட்க ‘சென்று சேர இலக்குகள் இல்லாதவனுக்கு எல்லா திசையிலும் பயணம் தான்.’
Sheik Hussain A
1
47%
Flag icon
உலக இச்சைகளில் இருந்தும், கடமைகளில் இருந்தும் துண்டித்துக் கொண்ட அலைச்சல். அவன் அவனாக இருப்பதை உதறிய நாளில் அவனொரு மரமானான், கல்லானான், செடியானான், நீர்த்துளிகளானான், மணற்துகள்களாகினான். எலும்பும் சதையும் குருதியும் பிரபஞ்சத்தோடு சேர்ந்த எல்லாமுமாகின. 
Sheik Hussain A
1
56%
Flag icon
அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை. அவள் அன்பின் கடல்.
Sheik Hussain A
1
57%
Flag icon
"சொற்கள் தான் உலகம், சொற்கள் தான் வாழ்க்கை, சொற்கள் தான் விடுதலை, சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா... 
Sheik Hussain A
1
62%
Flag icon
பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
Sheik Hussain A
1
62%
Flag icon
சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும். 
Sheik Hussain A
1
65%
Flag icon
இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை.
Sheik Hussain A
1
68%
Flag icon
சக மனிதனை ஏமாற்றாமல் வாழ்வதும் சக மனிதனிடம் ஏமாறாமல் வாழ்வதும் எளிதான காரியமில்லை
Sheik Hussain A
1
70%
Flag icon
தீமைக்குத்  தீமை செய்கிறவர்களை விடவும் நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் தான் நம்மை சூழ்ந்து வாழ்கிறார்கள். 
Sheik Hussain A
1
71%
Flag icon
{அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.}
Sheik Hussain A
1
83%
Flag icon
தோல்வியுற்று மீண்டுவரும் மனிதனுக்கு சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும் அவன் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பவதெல்லாம் ஒன்றைத்தான், நான் இன்னொருமுறை உங்கள்முன் தோற்கப்போவதில்லை. அன்வர் இந்த உலகிற்கு அந்தச் செய்தியை சத்தமாய் சொல்லத் துவங்கியிருந்தான்.
Sheik Hussain A
1
86%
Flag icon
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
Sheik Hussain A
1
97%
Flag icon
மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்.
Sheik Hussain A
1
97%
Flag icon
விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல் துயரமானது வேறில்லை. 
Sheik Hussain A
1
98%
Flag icon
‘கண்மணி எல்லோரையும் மீட்டெடுத்துக் கொடுக்கும் உன்னை என்னால் மீட்டெடுக்க முடியுமா?  உன்னிலிருந்து நீங்கிய நாளிலிருந்து இன்னும் நான் அமைதியைக் கண்டடையவில்லை.  எரிமலைக் குழம்பின் உலர்ந்த சாம்பலாய் உன் நினைவுகளிலிருந்து முழுமையாய் மீளமுடியாதவளாகத்தான் இப்போதும் இருக்கிறேன். எப்போதெல்லாம் ஒரு மழை பெய்கிறதோ, எப்போதெல்லாம் ஒரு விதை முளைக்கிறதோ அப்போதெல்லாம் நீயும் என்னில் புதிதாய் முளைத்துக் கொண்டேதான் இருந்தாய். பறவைகளும் போகத் துணியாத வறண்ட நிலங்களில் கூட உனக்காக அலைந்து திரிய தயாராய் இருந்தேன், ஆழ் கடலில் நீ இருக்கக் கூடுமென்றால் மொத்தக் கடலையும் நீந்திக் கடந்து உன்னை வந்து சேர்ந்துவிடும் ...more
Sheik Hussain A
1