துணைக்கண்டத்தைவிட்டு நிரந்தரமாகப் போய்விடலாம் என்று பிரிட்டன் முடிவு செய்தபோது, ஐநூற்று அறுபத்தி ஐந்து சமஸ்தானங்களும் தன்னியல்பாக இந்திய யூனியனுடனோ, பாகிஸ்தானுடனோ இணைந்துவிடும் என்றுதான் கருதினார்கள். அது ஒரு பெரும் பிரச்னையாக இருக்க முடியாது என்றே நினைத்தார்கள். பிரச்னையாகவும் இல்லை. பிரச்னை கொடுத்த ஒரு சில சமஸ்தானங்களையும் பேசிச் சரி செய்ய முடிந்தது.

