வாழ்ந்து கெட்ட வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும், அரசமரச் செடிகள் சுவர் வழி வேர்விட்டு, வெடித்து கிளம்ப கரைய அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடுநிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா? கதவு, ஜன்னல், பாத்திரங்கள்... போன்றவற்றை விற்ற பின்பு, கையிருப்புக் கரையக் கரைய மாநகரத்து சிக்னல் கம்பங்களுக்கு அருகே சிகப்பு விளக்கு விழும் வரை காத்திருந்து ஒடிவந்து வாகனங்களுக்கு இடையே நுழைந்து கார் துடைக்கும் துணியும், ஆங்கில ரைம்ஸ் புத்தகமும் விற்பவர்களில்
...more