எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த ‘சந்தால்’ பழங்குடி இனப்பெண் எழுதிய கவிதை அது. அந்தக் கவிதையில் ஒரு பெண் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று தன் தகப்பனிடம் சொல்கிறாள்: அப்பா, உன் ஆடுகளை விற்றுத்தான் நீ என்னைப் பார்க்க வர முடியும் என்ற தொலைதூரத்தில் என்னைக் கட்டிவைக்காதே! மனிதர்கள் வாழாமல் கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில் மணம் ஏற்பாடு செய்யாதே!