இறந்துகிடந்த அந்தக் குழந்தையின் கண்களை சந்தித்த போது, இவன் அதிர்ச்சியைச் சந்தித்தான்; இந்த உலகின் மீதான அவநம்பிக்கையைச் சந்தித்தான்; அதை சாத்தியப் படுத்தும் மரணத்தைச் சந்தித்தான்; இவன் கேள்வி கேட்க நினைத்த கடவுளைச் சந்தித்தான்; சுற்றிலும் சாக்கடை நீர் பெருகிக்கிடக்க, அவற்றில் எருமைகளையும் பன்றிகளையும் அவற்றின் வால்களில் மொய்த்துக்கொண்டிருக்கும் கொசுக்களையும் சந்தித்தான்; இதை ஏதும் கண்டுகொள்ளாமல், தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தைச் சந்தித்தான். அன்றிலிருந்து இவன், கற்ற புகைப்படக் கலை இவனிடம் இருந்து விலகிப்போனது. இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளிலோ திரைப்பட விழாக்களிலோ இவனைப் படம்
...more