புணர்ந்த நினைவுக்கு யோனிமயிர் பிடுங்கிப்போனவன் குருதி கசிய முலைக்காம்பு கடித்துக் கதறச்செய்தவன் மதுவருந்திக் கலந்து முகமெங்கும் வாந்தியெடுத்தவன்.132 * தீட்டுப்படாதிருக்க பூணூல் கழற்றிப்புணர்ந்த அந்தணன் வயாக்ராவில் மூச்சிறைத்துத் தோற்ற பெருங்கிழவன் ஈடுதரவியலா நிறைமாத கர்ப்பிணியால் நாடி வந்தவன் மனைவியின் அவிசாரித்தனம் கூறி மடி சாய்ந்தழுதவன்.133 * விரை துலங்கித் தொங்கின ஓட்டை உள்ளாடைக்காரன் விடிய விடிய கதை கவிதை சொல்லிக்கழுத்தறுத்தவன்