இக்காப்பியத்தில் பரத்தையே தலைவி. களைத்துறங்குபவன் குறட்டையொலிக்கும், ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதையனைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசுபிசுத்த ஈரச்சீழ் வடிந்துலர்ந்த இந்த யோனியெழுத்து – அது படிப்பவர் மனசு பொறுத்து. என் வரையில் குற்றவுணர்ச்சியோ பாசாங்கோ இல்லாததொரு நனிநெஞ்சம் மிக விரும்பும் இக்கவிதைகளை. அதே போல் இவற்றை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் உண்டு உண்மையுணர்ந்த வேசிகளுக்கு.