'நான் பெண்களுக்குச் சொல்வது இதுதான்: உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்க முயலும்பொழுது உனக்கு நான் அஹிம்சையை உபதேசிக்கமாட்டேன். நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். நீ நிராயுதபாணியாக இருந்தால், இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று? இந்த நிலைமையில் நீ செய்கிற கொலையோ, அது முடியாதபோது நீ செய்து கொள்கிற தற்கொலையோ பாபமாகாது.'