மாடி ஜன்னல் ஒன்றின் வழியாக ஒரு குட்டிப் பெண் எட்டிப்பார்த்தாள். எதையோ யோசித்துக் கொண்டிருப்பவன் போல மெதுவாகத் தலையைக் குனிந்துகொண்டே நடந்தேன். “உலகம் உன்னை எப்படி நடத்துகிறது?” என்று என் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். குழியான கன்னம். தெருவோடு போன ஒரு பெண் என்னைக் கண்டு பயந்து ஒதுங்கிப் போனாள். அப்படியாகி விட்டேனா நான்? கன்னங்கள் இரண்டும் கிண்ணங்களாகி மண்டைக்குள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. உண்மையில் பயங்கரமாகத்தான் இருந்தேனா நான்? பசியினால், உயிர் வாழ்வதற்காக நான் உருவ அழகு இழந்தே தீர வேண்டுமா? ஆத்திரமாக வந்தது எனக்கு. ஆனால் அந்த கோப வேகத்தைத் தாங்கக் கூட என் உடலில் சக்தியில்லை. ஒரு
...more

