குடியான் ரகளை பற்றிக் கேள்விப்பட்டதும் நம்ப முடியாததாகவே இருந்தது. இரண்டு தலைமுறைகளுக்கு முன் நடந்தது. ஆனால் இன்று புராணக்கதைபோல ஆகிவிட்டது எல்லாம். ஒரு காலத்தில் தன்னுடைய சாதி - ஆடுமாடுகளைப்போல தொழுவங்களில் வசித்து, நுகங்களில் மாட்டப்பட்டு, அடிமை வேலை செய்து, வாழ்ந்து வந்தது என்பது அவனுக்கு ஒரு செய்தியாகத்தான் தெரிந்தது. அதைக் கற்பனையில் விரித்துக்கொள்ளவே இயலவில்லை. அரை