உயரம் எதுவென அறியாத அப்பனிமலையில், ஒரே நேரத்தில் ஒரு குழு ஏறிக் கொண்டிருக்கையில், இன்னொரு குழு இறங்கிக் கொண்டிருக்கிறது. தூரமறிய ஏறும் ஒவ்வொருவரும், இறங்குபவனைப் பார்த்து கேட்கிறான்... ‘இன்னும் எவ்வளவு தூரம்?’ ‘தோ, கொஞ்சம் தூரந்தான்.’ இது பயிற்றுவிக்கப்பட்ட பாடம்.