“யாரு சாமி இவன்? எங்கிருந்து வந்தான்? இவன் யாரோட மிச்சம்?” எனத் துள்ளும் ஒரு காட்சி உண்டு. அத்துள்ளல் கொண்டாட்டம் சம்மந்தப்பட்டது. உள்ளுக்குள் பொங்கும் பெருமிதப் பொங்குதல் அது. அது இடம், தகுதி, அந்தஸ்து, வயது எல்லாவற்றையும் துடைத்தெறிந்து, மனிதனை ஒரு குழந்தையைப்போல் நிர்வாணப்படுத்தி, மழையில் ஆனந்தக் களியாட வைக்கும். இரண்டு,