எல்லாவற்றையும் இழந்துவிட்டு, ஒருவருக்கு இன்னொருவர் மட்டுமே ஆறுதல் என்ற வாழ்வின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு முதிய கணவன், மனைவியின் அளவிட முடியாத நேசம் அது. சிதம்பரம் கோவிலின் பருத்த கல்தூண்களுக்கிடையே கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு, கடந்து போன வாழ்வின் நெரிசல்களையும், நேசத்தையும் கண்களால் பகிர்ந்து கொள்ளும் அக்காட்சியை பாலேந்திரன் வாசிக்க, வாசிக்க என் அம்மாவிலிருந்து, வம்சி வரை கண்களைத் துடைத்துக் கொண்டோம்.
Vairamayil liked this