2005 இல் தான் கொற்றவை என்ற பெயரில் ஒரு தமிழ் நாவல் எழுதினேன். கொற்றவை என்ற பெயர் மட்டுமே அதன் தொடக்கமாக என் கையிலிருந்தது. “மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றுகந்த கோமளும் தான் படைத்த கொற்றத்தாள்” என்று கண்ணகியை இளங்கோ வாழ்த்துகிறார். கடைசியில் அந்த வரிகளைச் சென்றடைந்தேன். தியானிக்கத் தியானிக்க மேலதிக அர்த்தங்கள் பெருகி வந்த வார்த்தையது. கொற்றம் என்றால் அரசு என்றும் போர்வீரம் என்றும் அர்த்தமுண்டு. கொற்றவை என்றால் அரசி என்றும் போர்த்தெய்வம் என்றும் தமிழ் சொல்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தின் சாரமாக ஒற்றை வார்த்தையில் ‘கொற்றவை’ என்று சொல்லலாமெனத் தோன்றியது. அந்த

![நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1534319461l/41147811._SY475_.jpg)