More on this book
Kindle Notes & Highlights
கரிய கற்பரப்பில் காற்றின் சுழிப்பில் மென்மணல் ஆவிப்படலம்போல நெளிந்து செல்லாத்துணிபோல இழுபட்டுச் சென்றது.
ரத்தம் குடிக்கும் வௌவால்களைப் போன்றவர்கள். ஆங்கில அதிகாரத்தின் கோபுரத்தில் தலைகீழாகத் தொங்கும் பட்டாளம்.
அவர்கள் அடையாளமென நினைப்பதே தங்களைப் பிரித்துக்கொள்வதற்காகத்தான்.
இந்த மனிதன் நெற்றியில் மெல்லிய செங்குத்தான சிவப்புக்கோடு ஒன்றைப் போட்டிருக்கிறான். அவன் மற்றவர்களில் ஒருவனல்ல என்று காட்ட விரும்புகிறான்.
ஆனால் இன்னும் அந்தக் கண்கள் அவனை ஏற்கவில்லை. யானையின் கண்களை மனிதர்கள் புரிந்துகொள்ளவே முடியாது. இருளுக்குள் உறையும் நெருப்புபோல ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.
‘இந்த மனிதன் ஒரு கவிஞன்’ என்று ஏய்டன் நினைத்துக்கொண்டான். ‘வாழும் காலத்தின் எல்லைகளை அவர்களால்தான் தாண்டமுடிகிறது.’
“உலகம் முழுக்க இப்படித்தான். சுரண்டப்படும் மக்கள்தான் இழிவுபடுத்தப்பட்டு வெறுக்கவும்படுகிறார்கள்.
ஒரு வேடத்தை அணிந்ததுமே நாம் அதுவாக ஆக ஆரம்பிக்கிறோம்.
வாளால் கழுத்தை வெட்டும் ஆண்டை அல்ல அது.
நுட்பமான குழாயை உடலில் செலுத்தி கடைசித்துளிக் குருதியையும் உறிஞ்சிக்குடிக்கும் ஆண்டை.
“பஞ்சத்துக்கும் விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம்?
பிரிட்டிஷ் ஆட்சி என்பதே அதிகாரிகளும் பண்ணை உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் சேர்ந்து அடிக்கும் ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளை மட்டும்தானே?”