டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோருடன் இணைந்து தியாகராயர் 1916-ல் உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமே பின்னாளில் அது நடத்திய பத்திரிகையின் (ஜஸ்டிஸ்) பெயரால் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ - நீதிக் கட்சி என்று அழைக்கப்படலானது. 1920-ல் நடந்த தேர்தலில் மதறாஸ் மாகாணத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது நீதிக் கட்சி. சென்னை மாநகராட்சியில் பதவியிலிருந்த காலத்தில் தியாகராயர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. இந்தியாவிலேயே முன்னோடியாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் இவரே!