ஒருவழியாக வேலை தொடங்கி ‘அறிவாலயம்’ நிமிரத் தொடங்கியபோது, ‘கட்டிட அனுமதியில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது. உடனே பணியை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏவியது எம்ஜிஆர் அரசு. வேலையை நிறுத்திவிட்டுக் கட்டிட அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது திமுக. அப்போது, ‘பொதுப் பயன்பாட்டுக்காக 10% இடத்தை ஒதுக்க வேண்டும்’ என்றார்கள். அப்படி ஒதுக்கியதும், ‘அந்த இடத்தை மாநகராட்சி பெயரில் பத்திரப் பதிவுசெய்து தந்தால்தான் அனுமதி’ என்றார்கள். இப்படிச் சொன்னதையெல்லாம் செய்தும் அடுத்தடுத்து குடைச்சல்கள் வரவும், பிரச்சினையை 18.1.1986 அன்று சட்ட
...more