முரசொலி மாறனையும் என்னையும் அழைத்துக்கொண்டு கண் கட்டு, கடும் குளிர் எதையும் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் தொழில் வளர்ச்சி சார்ந்து சில நகரங்களை எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். அப்போது, ‘தொழில், வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டை நாட்டிலேயே முதல் நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று சொன்னவர், அதன்படியே உழைக்கவும் செய்தார்.