பெரியப்பா கொடுத்த சிலை வடிவமைப்புல வள்ளுவரோட ஒரு கால் நேரா ஊன்றியும், இன்னொரு கால் கொஞ்சம் வளைஞ்சும் இருக்கும். ‘ஜைன விக்கிரகங்கள் எல்லாம் நேரேத்தானே நிற்குது? வள்ளுவர் ஏன் வளைஞ்சுருக்கார்?’னு கலைஞர் கேட்ருக்கார். ‘முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய கருத்தை உலகுக்குக் கொடுத்தவர் வள்ளுவர். அவர் ‘பங்க நிலை’யில் நிக்கிறதுதான் அழகு’ன்னு பதில் சொல்லியிருக்கார் பெரியப்பா. சிலையை இரு கூறா பிரிச்சு உருவாக்கினார் பெரியப்பா. அறத்துப் பாலைக் குறிக்கிற மாதிரி அறபீடம் 38 அடியிலும், பொருள், இன்பத்துப் பாலைக் குறிக்கிற மாதிரி சிலை 95 அடியிலும்னு 133 அடியை வகுத்தார். பீடத்துல யானைகள் வேணும்னு கலைஞர்தான்
...more