தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறைவு. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் போன்றவற்றோடு எப்படி நாம் ஒப்பிட முடியும்? அங்கெல்லாம் தண்ணீர் அதிகம். மண்ணின் வளமும் அதிகம். ஆனால், வளங்கள் அடிப்படையில் பின்னே இருந்தாலும், இருக்கிற கட்டமைப்பைக் கொண்டு எப்படிச் சிறப்பாகச் செயல்படுவது என்பதில் நிச்சயம் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. சிக்கனமான நீர்ப் பாசனத்தைக் கையாள்வதில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, சொட்டுநீர்ப் பாசன முறையைக் கையாள்வதைச் சொல்லலாம். விவசாயத்தோடு சேர்ந்து துணைத் தொழில்களைக் கையாளும் நம்மவர்களின் உத்தியைச் சொல்லலாம். குறிப்பாக முட்டை உற்பத்தி, மீன் உற்பத்தி. மழைநீர்
...more