நம்முடைய விவசாயிகளில் 98% பேர் சிறு விவசாயிகள். காரணம், திராவிட இயக்க ஆட்சியில் இங்கே நிலங்கள் பெரிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்புச் சட்டம், நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலமளிப்புத் திட்டம் இரண்டாலும் பெரிய அளவில் சாத்தியமானது இது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மட்டும் 70% வரி வருவாயை டெல்லிக்குத் தருகின்றன. டெல்லியிடம் தமிழ்நாடு 100 ரூபாய் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குகிறது என்றால், உத்தர பிரதேசம் 10 ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்குகிறது. பக்தவத்சலம் காலத்திலேயே, நிதிக் குழுவுக்கு 1966-ல் ஒரு அறிக்கை கொடுத்தார். தமிழ்நாட்டை நீங்கள்
...more