1955 இந்துத் திருமணச் சட்டப்படி, ‘மணப் பெண்ணிற்கு மணமகன் தாலி கட்டியிருக்க வேண்டும் மற்றும் சமயச் சடங்குகளை நடத்தியிருக்க வேண்டும்’. அதுவே சட்டப்படியான திருமணம். ஆனால், தொடர்ந்து, “திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். அதில் சமயச் சடங்குகளைப் புகுத்துவது தவறு” என்று பொது மேடைகளில் பிரச்சாரம் நடத்திவந்த இயக்கம் திராவிட இயக்கம். திமுக 1968-ல் இந்து திருமணச் சட்டத்தில் புரட்சிகரமான ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன் விளைவாக, ‘தாலி கட்டாத திருமணங்களும், சமயச் சடங்குகள் இல்லாத திருமணங்களும் சட்டப்படி செல்லும்’ என்றானது. சீர்திருத்தத் திருமணங்களுக்கும், சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம்
...more