1971-ல் இந்து அறநிலையத் துறைச் சட்டம் திருத்தப்பட்டு, ‘எந்தச் சாதிப் பிரிவினராக இருப்பினும் அவர்கள் திருக்கோயில்களின் வழிபாட்டு முறைகளை முறையாக கற்றுத் தேர்ந்திருப்பின், அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தடையில்லை’ என்னும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை உரிமையை ஆகமம் என்ற பெயரில் நிலைநாட்டி, 2015-ல் இச்சட்டத் திருத்தத்தை ரத்துசெய்துவிட்டது.