1969-ல் அகில இந்திய வானொலி ஒலிபரப்பில், கருணாநிதி வாசித்த இரங்கல் கவிதை லட்சக்கணக்கான தமிழர்களின் கண்களில் நீரைப் பெருக்கச் செய்ததுடன் அவருடைய கவித் திறமையைக் கேட்டுப் பலரும் அவர்பால் ஈர்க்கப்படவும் காரணமாக இருந்தது. அண்ணாவுக்குப் பிறகு திமுகவுக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்பது என்ற கேள்விக்கான விடையை அந்தக் கவிதை ஒலிபரப்பே தந்தது.