உயர் கல்வியில் இந்திய அளவில் முன்னணியில் வர வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதுவே தனியார் கல்லூரிகள் வருகைக்கும் வழிவகுத்தது. நிச்சயமாக அது உதவியது. ஆனால், முதலீடு நுழையும்போது தவறுகள் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமுமே... இது ஒரு நல்ல வியாபாரம் என்று கருதிக் கல்வித் துறையில் இறங்கியபோது வீழ்ச்சி தொடங்கியது. ஓர் உதாரணம், தமிழ்நாட்டில் 16 அரசுப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. நமக்கு மேலும் 50 பொறியியல் கல்லூரிகள் வரை தேவையாக இருந்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக 550 தனியார் கல்லூரிகள் இங்கே அனுமதிக்கப்பட்டன. விளைவாக, பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடவே,
...more