காலையில் சீக்கிரமே எல்லா தினசரிகளையும் படித்துவிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், அவர் தொடர்பாக ஏதேனும் விமர்சனம் வைத்திருந்தால், படித்த கையோடு தொலைபேசியில் நம்மை அழைத்து விளக்கம் அளிப்பார். நாம் கூறும் கருத்து ஏற்புடையது எனில், உடனே அதை ஏற்றுக்கொள்வார். இது அரிய குணம் என்றே நினைக்கிறேன்.