குல ஆசாரங்களைக் கைவிட்டார். பூணூலை அறுத்தெறிந்தார். குடுமியைத் துறந்தார். சாகும் வரை சடங்குகளுக்கும் மூடப்பழக்கவழக்கங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவந்தார். பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர் திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிச் சுமந்து பரப்பினார்.